கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2021-03-29 18:56 GMT
மணமேல்குடி:
மணமேல்குடி அடுத்த அந்தோணியார்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்ததாக கூறி கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தங்கள் கிராமத்திற்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால் வரும் தேர்தலை புறக்கணித்து எங்களது வாக்காளர் அட்டையை ஏப்ரல் 4-ந்தேதி மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்போம் என கூறினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்