விக்கிரமசிங்கபுரத்தில் விபத்தில் தொழிலாளி சாவு

விக்கிரமசிங்கபுரத்தில் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-03-30 19:21 GMT
விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அம்பலவாணபுரம் காந்திநகரைச் சேர்ந்தவர் கணேஷ்ராஜா (வயது 45). கூலி தொழிலாளியான இவர் கடந்த 25-ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். 

அம்பலவாணபுரம் மெயின்ரோட்டில்  அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கணேஷ்ராஜா மீது மோதியது. இதில் காயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ்ராஜா இறந்தார். 

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்