சென்னிமலை முருகன் கோவிலில் மகா தரிசனம்

சென்னிமலை முருகன் கோவிலில் மகா தரிசனம் நடைபெற்றது.

Update: 2021-03-30 21:11 GMT
சென்னிமலை  முருகன் கோவிலில் மகா தரிசனம் நடைபெற்றது.
சென்னிமலை முருகன்
சென்னிமலை முருகன் கோவிலில் கடந்த 28-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் நேற்று நடைபெற்றது.
மஞ்சள் நீர்
இதையொட்டி நேற்று காலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு மஞ்சள் நீர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் செய்திகள்