தூத்துக்குடியில் 16 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-03-31 18:52 GMT
தூத்துக்குடி, ஏப்:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 554 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 16 ஆயிரத்து 304 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 107 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 143 பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்