திருச்செந்தூர் அருகே பாதிரியார் தற்கொலை

திருச்செந்தூர் அருகே பாதிரியார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-01 18:25 GMT
திருச்செந்தூர்:
தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த ஆஸ்வால்ட் மகன் மரிய அஜித் (வயது 24). இவர் திருச்சியில் உள்ள ஒரு இறையியல் கல்லூரியில் படித்துள்ளார். தற்போது திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் கடந்த 8 மாதமாக பயிற்சி பாதிரியாக பணியாற்றி வந்தார். இவர் தங்கியிருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதிரியார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்