மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் விவசாயி பலி

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் விவசாயி பலியானார்.

Update: 2021-04-02 19:58 GMT
கறம்பக்குடி, ஏப்.3-
கறம்பக்குடி அருகே உள்ள கணக்கன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 55) விவசாயி. இவர் நேற்று வெட்டன் விடுதி கடைவீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கல்லாக்கோட்டை தனியார் மதுபான ஆலைக்கு சொந்தமான வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தங்கவேலுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்கா தேவி வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் மங்களாகோவிலை சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்