பெரம்பலூரில் கொரோனாவால் ஒருவர் பாதிப்பு
பெரம்பலூரில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,309 ஆக உயர்ந்துள்ளது. இதில் 21 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,281 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 7 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.