அரியலூரில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று

அரியலூரில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-04-02 21:06 GMT
அாியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 11 பேர் கொரோனா ெதாற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஏற்கனவே 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 4,742 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 38 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்