வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

ஆலங்குளம் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2021-04-03 19:17 GMT
ஆலங்குளம், 
ஆலங்குளத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிறப்பு வழிபாட்டில் ஆலங்குளம், அண்ணா நகர், பாரதி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கல்லமநாயக்கர் பட்டி சோலைமலை சுந்தராஜ பெருமாள் கோவில், சோலைமலை சுந்தராஜ பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

மேலும் செய்திகள்