ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் தீவிர வாகன சோதனை

ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் தீவிர வாகன சோதனை நடத்தினார்

Update: 2021-04-04 19:17 GMT
பனைக்குளம்
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாக வாகன சோதனையில் மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பெருங்குளம் அருகே உள்ள சுங்கச்சாவடி வழியாக செல்லக்கூடிய கனரக வாகனம் மற்றும் கார்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் சோதனைக்கு பிறகே செல்ல அனுமதிக்கப்பட்டன. குறிப்பாக ராமேசுவரம் செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களும், அரசியல் கட்சிகளை சேர்ந்த வாகனங்களும் கடுமையான சோதனைக்கு பிறகு அனுப்பி வைக்கப்பட்டன. சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளதை தொடர்ந்து கலெக்டர் முக்கிய சாலைகள் முழுவதும் நேரடியாக ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்