உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையம் காலனி தெருவை சேர்ந்த செல்வமணி(வயது 40), மேலத்தெருவை சேர்ந்த குமார்(47) ஆகிய 2 பேரும் மது பாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.