வாலிபர் கொலையில் 3 பேர் கைது கஞ்சா கேட்டு தொல்லை கொடுத்ததால் கொன்றது அம்பலம்

வாலிபர் கொலையில் 3 பேர் கைது கஞ்சா கேட்டு தொல்லை கொடுத்ததால் கொன்றது அம்பலம்.

Update: 2021-04-05 02:14 GMT
திரு.வி.க. நகர், 

சென்னை ஓட்டேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் மதன் (வயது 30). இவர், நேற்று முன்தினம் இரவு பாஷ்யம் 3-வது தெருவில் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக ஓட்டேரியை சேர்ந்த சூர்யா (22), சக்திவேல் (20) மற்றும் கார்த்திக் (28) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனர்.

அதில் கொலையான மதனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்யாவுக்கும் கஞ்சா விற்பது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் மதன் தொடர்ந்து சத்யா மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கஞ்சா கேட்டு தொல்லை செய்ததால் அவரை கொலை செய்ததாக கைதான 3 பேரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் கைதான 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சத்யா, ஜீவா, பூபதி, சுரேஷ் ஆகிய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்