கீரனூர் அருகே கார் மோதி மெக்கானிக் பலி

கார் மோதி மெக்கானிக் பலியானார்.

Update: 2021-04-05 18:13 GMT
கீரனூர்:
கீரனூர் தெற்கு ரத வீதியில் டூவீலர் மெக்கானிக் கடை வைத்திருப்பவர் முருகானந்தம் (வயது 43). இவர், கீரனூர் புறவழிச்சாலை பகுதியில் பழுதாகி நின்ற மோட்டார் சைக்கிளை சரி செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சாலையை கடக்க முயன்ற போது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிள் மீது மோதிய காருக்கு பின்னால் வேகமாக வந்த மற்றொரு காரும் மோதியது. விபத்தை ஏற்படுத்திய காரில் வந்தவர்கள் காரை அங்கேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்களை அப்புறப்படுத்தினர். பின்னர் முருகானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் செய்திகள்