முதியவர் பலி

இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-04-06 19:55 GMT
விருதுநகர், 
விருதுநகர் சூலக்கரை முல்லை நகரைச்சேர்ந்தவர் பொன்னப்பன் (வயது 65). இவர் தனது இருசக்கர வாகனத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு தினசரி சென்று வருவது வழக்கம். நேற்று இவர் கோவிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஆமத்தூர் போலீஸ் நிலைய போலீஸ்காரர் செல்வகுமார் பொன்னப்பனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் வாகனத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பொன்னப்பன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிஅவரது மனைவி கல்யாணி (61), சூலக்கரை போலீசில் புகார் செய்தார், அதன்பேரில் போலீசார் ஆமத்தூர் போலீஸ்காரர் செல்வகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்