கரும்பு தோட்டத்தில் தீ விபத்து

கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது

Update: 2021-04-06 21:27 GMT
நொய்யல்
நொய்யல் அருகே சேமங்கி பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் (வயது 48). விவசாயி. இவரது தோட்டம் முத்தனூர் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு பின்புறம் உள்ளது. அதில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தமிழ்வாணன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.1 லட்சம் மதிப்பிலான கரும்பு தீயில் எரிந்து நாசமாயின.

மேலும் செய்திகள்