தொழிலாளி தற்கொலை

நிலக்கோட்டை அருகே தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-07 15:26 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் அல்போன்ஸ் (வயது 34). கூலித்தொழிலாளி. 

இவர், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். 

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அல்போன்ஸ் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். 

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அல்போன்ஸ் பரிதாபமாக இறந்தார்.

 இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்