நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள சர்க்கார்பதியை சேர்ந்தவர் கண்டிஸ்வரன் (வயது 28). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மீன்கரை ரோடு நஞ்சேகவுண்டன்புதூர் பகுதியில் சென்ற போது, நாய் குறுக்கே வந்தது.
இதனால் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி கண்டிஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.