கோர்ட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோர்ட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Update: 2021-04-07 19:03 GMT
மதுரை
நாகப்பட்டினம் மாவட்ட கோர்ட்டில் இளநிலை கட்டளை நிறைவேற்றுனராக பாக்கியலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், அரசு பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவருக்கு கோர்ட்டு உத்தரவை கொடுக்க சென்றுள்ளார். ஆனால் அவர் அதை வாங்க மறுத்து, மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து மதுரை மாவட்ட சிவில் கோர்ட்டு இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சங்க மாநில தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தணிக்கையாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் மாலிக் பாட்சா, இணை செயலாளர் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்