தொடர் விடுமுறை எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது

தொடர் விடுமுறை காரணமாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது

Update: 2021-04-07 21:05 GMT
தொடர் விடுமுறை காரணமாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
டாஸ்மாக் கடை
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 4-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதை தொடர்ந்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டது.இதனால் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
வரிசையில் நின்று
இதன் காரணமாக மது விற்பனை அமோகமாக நடந்தது. குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஏராளமான குடிமகன்கள் வரிசையில் நின்று தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்