சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

வீரவநல்லூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2021-04-08 18:34 GMT
விக்கிரமசிங்கபுரம், ஏப்:
விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 46). இவர் வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். குடும்ப தகராறு காரணமாக ராமமூர்த்தி நேற்று அகஸ்தியர்பட்டி அருகே உள்ள ஒரு பகுதியில் விஷம் குடித்து கிடந்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதியை சேர்ந்த சிலர் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்