மாயமான பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார்

மாயமான பெண் கிணற்றில் பிணமாக மிதந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-04-08 18:54 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் கிராமம், முல்லை நகரைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் மஞ்சுளா(வயது 40). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜாவுக்கும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கார்த்திக் (14) என்ற மகன் உள்ளார். 

இந்தநிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ராஜா உயிரிழந்ததால், மஞ்சுளா மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள தனது சகோதரர் கருப்பையா வீட்டுக்கு மஞ்சுளா வந்தார். பின்னர் 3 நாட்களாக மஞ்சுளாவை காணவில்லை. இதற்கிடையே அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது விவசாய கிணற்றில் மஞ்சுளா பிணமாக மிதந்தது நேற்று தெரியவந்தது. 

இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மங்சுளாவின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதுகுறித்து கருப்பையா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்