புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா

மாவட்டத்தில் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-04-08 19:13 GMT
புதுக்கோட்டை
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவிவரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 33 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆனார்கள். அந்தவகையில் இதுவரை 11 ஆயிரத்து 714 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்