கார் கவிழ்ந்து 3 குழந்தைகளின் தந்தை சாவு

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 3 குழந்தைகளின் தந்தை உயிரிழந்தார்

Update: 2021-04-08 19:27 GMT
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன்விடுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்கிற ரமேஷ் (வயது 35). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 6-ந் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெட்டன் விடுதியில் இருந்து அவருக்கு சொந்தமான காரை ஓட்டிக்கொண்டு துவார் கிராமத்தில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றார். பின்னர் அங்கிருந்து வெட்டன்விடுதிக்கு திரும்பி சென்றபோது கெண்டையன்பட்டி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த ரமேசுக்கு, சுந்தரி என்கிற மனைவியும்- 3 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்