மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த மூதாட்டி சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்

Update: 2021-04-08 19:53 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் கணபதியம்மாள்(வயது 66). இவருக்கு சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் அடிக்கடி மயங்கி கீழே விழுவார். இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக அவருடைய மகனுடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் காயத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்