முதியவர் கைது
மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் பசிர்அகமதுகான் (வயது64). சம்பவத்தன்று இவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது அக்காளிடம் தெரிவித்துள்ளாள். அவர் உடனே மதுரை டவுன் மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து பசிர்அகமதுகானை கைது செய்தனர்.