காளியம்மன் கோவில் திருவிழா

மானூத்து கிராமத்தில் காளியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2021-04-08 20:22 GMT
உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி அருகே உள்ள மானூத்து கிராமத்தில் காளியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காளியம்மன், பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் விரதம் இருந்த பெண்கள் முளைப்பாரி எடுத்தும், மாவிளக்கும் எடுத்தும் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை மானூத்து ஊராட்சி மன்ற தலைவர் சின்னசாமி தலைமையில் கிராம பொது மக்களும், விழா கமிட்டியினரும் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்