மேலும் 52 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-04-08 21:27 GMT
திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பெண்கள் உள்பட மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 

அதில் பட்டிவீரன்பட்டி பகுதியில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

இதற்கிடையே 18 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடுதிரும்பினர்.

 நேற்றைய நிலவரப்படி 368 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 12 ஆயிரத்து 265 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்