சுமை தூக்கும் தொழிலாளி சாவு
திண்டுக்கல்லில் லாரி மோதியதில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் சின்ன அய்யன்குளம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 42). சுமை தூக்கும் தொழிலாளி.
இவர் நேற்று திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் அருகே நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் மனோகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.