சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-09 04:31 GMT

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே உள்ள ஜல்லடியன்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த வியாசர்பாடியை சேர்ந்த ஸ்பீடு கார்த்திக் (வயது 28) என்பவரை அம்பத்தூர் அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் இருப்பதால் வியாசர்பாடி போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஜல்லடியன்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவரை வியாசர்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

மேலும் செய்திகள்