குளத்தில் மூழ்கி முதியவர் சாவு

ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் இறந்தார்.

Update: 2021-04-09 19:52 GMT
ஆலங்குளம், ஏப்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கி (வயது 80). திருமணம் ஆகாதவர். இவர் வயது முதிர்வின் காரணமாக, உறவினரின் வீடுகளில் உணவு சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் இசக்கி நேற்று மதியம் அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். அவர் தண்ணீரில் இறங்கியபோது நிலை தடுமாறி ஆழமான பகுதியில் விழுந்து மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், குளத்துக்குள் இறங்கி அவரை தேடினர். சிறிது நேரத்துக்கு பிறகு அவரை மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இசக்கி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்