மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள சு. ஆடுதுறை குற்றம் பொறுத்தவர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவன், அம்மன், நந்திபெருமானுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஆடுதுறை, கழனிவாசல், அத்தியூர், ஒகளூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.