ஊஞ்சலூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு

ஊஞ்சலூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-04-09 22:50 GMT
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கியது
மொடக்குறிச்சி கருந்தேவன்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கவாசகம். இவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவி பேபி (வயது 58). இவர்களுடைய மகன் ஞானசேகரன் (26). இவர் பி.இ. படித்துவிட்டு எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை ஞானசேகரன் தனது நண்பர்களோடு சேர்ந்து ஊஞ்சலூர் அருகே சோளங்காபாளையத்தில் உள்ள அரவை மில்லில் எலக்ட்ரிக்கல் சம்பந்தமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் அவரை தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
சாவு
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, ஞானசேகரன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்