கார் மோதி டீக்கடை தொழிலாளி பல

கார் மோதி டீக்கடை தொழிலாளி இறந்தார்

Update: 2021-04-10 20:22 GMT
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள பன்னிக்குண்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 28). இவர் திருமங்கலத்தில் உள்ள டீக்கடையில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் பூசலபுரத்தை சேர்ந்த மொக்கை ஏட்டு என்பவரும் வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இரவு இவர்கள் வேலை முடிந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கண்டுகுளம் வளைவில் திரும்பும்போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இதில் ராஜாவும், மொக்கை ஏட்டுவும் படுகாயம அடைந்தனர். உடனடியாக அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சையில் இருந்த ராஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மொக்கை ஏட்டுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்