தென்காசியில் 53 பேருக்கு கொரோனா

தென்காசியில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-04-10 20:41 GMT
தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 980 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 8 ஆயிரத்து 551 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 268 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவுக்கு 61 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்