நீலகிரியில் மேலும் 29 பேருக்கு கொரோனா
நீலகிரியில் மேலும் 29 பேருக்கு கொரோனா.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 8 ஆயிரத்து 937 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 29 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 15 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 966 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 681 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் 51 பேர் உயிரிழந்தனர். மீதம் உள்ள 234 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.