ஏர்வாடியில் ஓய்வுபெற்ற ஆசிரியை கொரோனாவுக்கு பலி
ஏர்வாடியில் ஓய்வு பெற்ற ஆசிரியை கொரோனாவுக்கு பலியானார்.
ஏர்வாடி:
ஏர்வாடியை சேர்ந்த 74 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை, கோவையில் உள்ள தனது மகனை பார்த்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். தொடர்ந்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை கொரோனா தடுப்பு விதிகளுடன் சுகாதார பணியாளர்கள் அடக்கம் செய்தனர்.