நீதிபதி உள்பட 4 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நீதிபதி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-04-12 20:09 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கோர்ட்டு நீதிபதி ஒருவர் உள்பட 4 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,349 ஆக உயர்ந்துள்ளது. இதில் 22 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,295 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 32 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்