கொரோனா தடுப்பூசி முகாம்
வத்திராயிருப்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சுபக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், ராம்குமார், பிரகஸ்பதி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.