விஷம் குடித்து 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

முதுகுளத்தூர் அருகே செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் விஷம் குடித்து 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-13 17:27 GMT
முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள கருமல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ். இவரது மகன் முகேஷ் கண்ணன் (வயது 16). 11-ம் வகுப்பு மாணவர். இவர் செல்போனில்  விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவரது தந்தை கண்டித்து வந்தார். சம்பவத்தன்றும் செல்போனில் முகேஷ்கண்ணன் விளையாடி உள்ளார். அவரை தந்தை கண்டித்து உள்ளார்.
இதனால் மனவருத்தம் அடைந்த முகேஷ்கண்ணன் வீட்டில் யாரும் இல்லாத போது விவசாயத்துக்கு பயன்படுத்தும் விஷ மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவருக்கு முதலுதவி செய்யப்பட்டு பின்பு மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முகேஷ்கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தேரிருவேலி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்