மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.

Update: 2021-04-13 18:05 GMT
கீரனூர்,ஏப்.14-
கீரனூரை அடுத்த கிருஷ்ணம்பாரப் பட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி ராணி (வயது 62). இவர் நார்த்தாமலை முத்துமாரி அம்மன் கோவில் தேரோட்டத்தை காணசென்றார். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராணியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்