பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

ராஜபாளையத்தில் பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்து சென்றனர்.

Update: 2021-04-13 20:55 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் உள்ள காமராஜர் சாலையை சேர்ந்தவர் ஆக்னெஸ்ட் கேத்ரின். இவரது கணவர் கதிர்வேல்முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். ஆதலால் அவர் தனது இரண்டு மகன்களுடன் தற்போது தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று எம்.ஜி.ஆர் நகருக்கு சென்று விட்டு, சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது  25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ஆக்னெஸ்ட் கேத்ரின் சைக்கிளில் இருந்து தள்ளி விட்டு,  கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பி செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர், நகை பறித்தவரை பிடிக்க முயன்ற போது,  இரு சக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்