மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-04-13 20:56 GMT
தோகைமலை
தோகைமலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தந்திரிபட்டியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 28). இவருடைய மனைவி பெரியக்காள் (24). இந்த தம்பதிக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. பெரியக்காளின் நடத்தையில் தங்கராசு சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்படும் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டிய தங்கராசு அருகில் கிடந்த அரிவாளை எடுத்து வந்து மனைவியை வெட்டினார். இதில் பெரியக்காளுக்கு தலை மற்றும் கைகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.  அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து பெரியக்காளை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி, மனைவியை வெட்டிய தங்கராசு மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்