கரூர்
கரூர் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளத்துப்பாளையம் ரயில்வே கேட் அருகே கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டன் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.