விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தேனி அருகே விஷம் குடித்து தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-14 17:41 GMT
தேனி: 

தேனி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). கூலித்தொழிலாளி. 

இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். 

உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 7-ந்தேதி இவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

பின்னர் அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

 இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்