ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி எலக்ட்ரீசியன் பலி

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பரத்குமார்.

Update: 2021-04-15 09:43 GMT

ஆவடியில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வேலை முடிந்து, ஆவடியில் இருந்து அம்பத்தூர் ரெயில் நிலையம் வரை ரெயிலில் சென்றார்.பின்பு அங்கு இறங்கி ரெயில் தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோது, எதிர்பாராத விதமாக சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி ரெயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்த பரத்குமாருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகள்