புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று வேகமாக அதிகரித்து வருகிறது.

Update: 2021-04-15 17:24 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று வேகமாக அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறையினரால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் கொேரானா சிகிச்சையில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 817 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 323 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்