நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்வு 475 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்வு 475 காசுகளாக நிர்ணயம்

Update: 2021-04-15 18:03 GMT
நாமக்கல், ஏப்.16-
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டு 475 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
15 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 15 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 475 காசுகளாக உயர்ந்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:- சென்னை-505, ஐதராபாத்-446, விஜயவாடா-452, மைசூரு-502, மும்பை-500, பெங்களூரு-495, கொல்கத்தா-501, டெல்லி-426.
முட்டைக்கோழி கிலோ ரூ.75-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.123-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
உற்பத்தி குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 2 வாரங்களாக கடுமையான வெப்பம் நிலவியது. இதில் சுமார் 15 லட்சம் கோழிகள் இறந்து விட்டதால் முட்டை உற்பத்தி 20 சதவீதம் வரை குறைந்தது. அதே நேரத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் முட்டையின் தேவை அதிகரித்து உள்ளது.
இந்த சூழ்நிலையில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்து இருப்பதால், முட்டைக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுவே முட்டை கொள்முதல் விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த 15 நாட்களில் 85 காசுகள் உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
========

மேலும் செய்திகள்