கரூரில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கரூரில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பஸ்களில் ஏறி போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.

Update: 2021-04-15 18:05 GMT
கரூர்
2-வது அலை
கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக்கி உள்ளது. அவை கடந்த முதல் நடைமுறைக்கு வந்தது. கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். 
பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அபராதம் விதிப்பு
இந்த பணியில் சுகாதாரத்துறையினர், நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி தற்போது போலீசாரும் அபராதம் விதிக்கும் பணியை தொடங்கி உள்ளனர். சாலையில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் முககவசம் அணியாமல் இருந்தால் அவர்களை மடக்கி பிடித்து ரூ.200 அபராதம் விதிக்கின்றனர். 
அந்த வகையில் நேற்று கரூர் கலெக்டர் அலுவலக சாலையில் முக கவசம் இல்லாமல் வந்த பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதித்தனர். 
விழிப்புணர்வு
அப்போது அந்த வழியாக வந்த ஒரு பஸ்சை நிறுத்தி, அதில் இருந்த பயணிகள் முக கவசம் அணிந்து உள்ளார்களா? என போலீசார் அதிரடி சோதனை செய்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா குறித்து எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரைகளையும் வழங்கினர்.

மேலும் செய்திகள்