சுரபி நதியில் வாலிபர் பிணம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் உள்ள சுரபி நதிக்கரையோரத்தில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் ஒன்று மிதந்தது.

Update: 2021-04-16 17:07 GMT
தேனி : 

தேனி மாவட்டம்  சின்னமனூர் அருகே குச்சனூரில் உள்ள சுரபி நதிக்கரையோரத்தில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் ஒன்று மிதப்பதாக சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். 

விசாரணையில், அவர் அய்யம்பட்டியை சேர்ந்த அன்பழகன் மகன் சுருளி (வயது 36) என்பது தெரியவந்தது. 

அவர் சுரபி நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்