ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-04-17 17:53 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, கோட்டையூர், திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 63 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் வீட்டு தனிமை மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 475 பேர் சிகிச்சையில் இருந்தனர்.இவர்களில் பூரண குணமடைந்த 40 பேர் நேற்று சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.


மேலும் செய்திகள்